|
அம்பாறையில் சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி- நால்வர் படுகாயம் |
|
|
|
Monday, 18 August 2008 |
|
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்காப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 9:15 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் 40 மில்லிமீற்றர் எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.
இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். நால்வர் படுகாயமடைந்தார்.
இதேவேளை, கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது நேற்று முன்நாள் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று படையினரில் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம், கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் நேற்று முன்நாள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
நெருடல் இணையம்
|