பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 August 2008

கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் தாய் மண்ணை காக்கும் பணிக்காக வந்து இணையுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெருமளவானவர்கள் தம்மை மீள இணைத்து வருகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பிலிருந்து தாய் மண்ணை காக்கவும் மீட்கவுமாக முன்னாள் போராளிகளை மீள வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அவசரமான வேண்டுகோளினை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவான முன்னாள் போராளிகள் வட்ட கோட்டச் செயலகங்களில் தம்மை இணைத்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப்
பொறுப்பாளர் பரா ஏற்றி வைக்க, தொடர்ந்து மக்களுக்கன மக்கள் கட்டுமானப் பயிற்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..