|
நெருக்கடியான சூழல்களைக் கடந்து எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் ஒன்றுகூடலில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது விடுதலைப் போராட்டம், நெருக்கடியான சூழல்களைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.
உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் பெரும் விலைகளைக் கொடுத்தே விடுதலையை வென்றெடுத்திருக்கின்றன.
எமது விடுதலைப் போராட்டமும் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று எதிரியானவன் மூர்க்கமான தாக்குதல்களை எமது மக்கள் மீது நிகழ்த்தி வல்வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் எமது விடுதலை இயக்கம், எதிரிகளுக்கு தகுந்த பதிலடியை கொடுக்கும்.
கடந்த கால போராட்ட காலங்களில் மக்கள் படையே பெரும் வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர்.
உலக விடுதலைப் போராட்டங்களிலும் மக்களின் பெரும் பங்களிப்புடனேயே விடுதலை வென்றெடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் அவர்.
நெருடல் இணையம்
|