|
இப்படியும் சில பைத்தியங்கள் |
|
|
|
Monday, 17 October 2005 |
4500 பவுண்டஸ் தொகையை ஒரு மாதம் தாரை வார்ப்பது எப்படி என்று உங்களுக்கு அறிய ஆசையாக இருக்கின்றதா? ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த Paisley என்ற 19வயது இளைஞனைக் கேளுங்கள். சென்ற வருடம் SMS எனப்படும் குறுந்தகவல்களை அனுப்பிய கட்டணமாக 4500 பவுண்டஸ் செலுத்தியுள்ளான். இவன் தன் வேலையையும் ராஜிநாமா செய்திருக்கிறான். காரணம் தன் நிறுவனக் கணனியை உபயோகித்து ஒரு மாதத்தில் 8000 இணையக் கடிதங்களை இவன் அனுப்பியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
இவன் வாரத்திற்கு 700 வரையிலான குறுந்தகவல்களை அனுப்பும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றான். தனக்கு SMS செய்திகள் அனுப்புவது, PING PONG விளையாடுவது போன்ற குதூகலத்தைக் கொடுக்கிறது என்கிறான் இந்த இளைஞன். இவன் அனுப்பிய இணையக் கடிதங்களில் அனேகமானவை இவன் காதலிக்கே அனுப்பப்பட்டுள்ளன. ஒரு தடவை காதலிக்கு அனுப்புவதாக நினைத்து தன் கடிதத்தை தன்னுடன் பணியாற்றும் ஒரு நண்பனுக்கு தவறுதலாக அனுப்பியதன் விளைவாகவே இவன் குட்டு மேலதிகாரிகளுக்கு அம்பலமாகியது. விசாரணைகளுக்கு முகம் கொடுக்க விரும்பாது இவன் தானாகவே பதவி விலகிக் கொண்டான். இவன் மனநோயாளி என்ற அடிப்படையில் இப்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றான். இளைஞர் சமுதாயத்தில் இப்படி எத்தனை எத்தனை விவகாரங்கள்? A.J.G
|