|
படையினரின் இரண்டாவது தொகுதி உடலங்கள் கையளிப்பு |
|
|
|
Thursday, 04 September 2008 |
|
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படையினரின் 19 உடலங்கள் நேற்று சிறிலங்கா படையினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பத்து உடலங்கள் கொண்ட இரண்டாவது தொகுதி இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டன.
நெருடல் இணையம்
|