|
மணலாற்றில் முன்னகர்வு முறியடிப்பு: உடலம் ஒன்று புலிகளால் மீட்பு |
|
|
|
Wednesday, 03 September 2008 |
|
மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது படையினர் ஒருவரின் சடலமும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
மணலாறு சிலோன்தியேட்டர் பகுதி ஊடாக நேற்றுப் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். புலிகளில் பலத்த எதிர்த் தாக்குதல்களை அடுத்து படையினர் முன்னர்வுகளைக் கைவிட்டு விட்டு தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர்.
நெருடல் இணையம்
|