பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

விடுதலைப் புலிகள் இன்னும் பலமாகவே இருக்கிறார்கள்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 07 September 2008

nerudal_05_09_08_ltte_fighter_01வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப் போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும், கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்;அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது

கடந்த செவ்வாய்கிழமையன்று 57 ௧ வது படைப்பிரிவைச்சேர்ந்த ; நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்ததாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர்.

லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர் படையினரின் சார்லி அணி கெப்டன் மங்கல ஜெயசூரிய தலைமையிலான டெல்டா அணி ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேறின.

இந்தநிலையில் அன்று பகல் வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தீவிர எதிர்த் தாக்குதலை ஆரம்பித்தனர். மூன்று திசைகளில் இருந்து இந்தத் தாக்குதலை அவர்கள் படையினர் மீது தொடுத்தனர். இதன் காரணமாக 4 வது சிங்கப் படைப்பிரிவின் சில குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் பிரிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களைச் சுற்றி நின்று தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கிப் பாரிய சேதத்தை ஏற்படுத்தினர்.

இதன் போது சார்லி அணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற லெப்டினன்ட் திராணகம கொல்லப்பட்டார். இவர் கடந்த மாதம் போர் முனையில் காயமடைந்த நிலையில் கடந்த வாரமே மீண்டும் களமுனைக்குத் திரும்பியிருந்தார். இதேவேளை இந்த மோதலின் போது இரண்டு தரப்பிலும் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது. படையினரில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குறித்த மோதலில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றை இராணுவத் தளபதி லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா அமைத்துள்ளார். 58 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சாவின்ட்ர சில்வாவின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க படையினர் பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்ற அடுத்தடுத்த வாரங்களில் எடுக்கப்போகும் முயற்சிகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என லக்பிம குறிப்பிட்டுள்ளது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..