|
வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யாழ். அரியாலை பகுதியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா பாலமோட்டை பகுதியில் நேற்று முன்நாள் காலை 6:40 மணியளவில் எறிகணைத் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலமோட்டை கல்வெளிக்குளத்தில் நேற்று முன்நாள் முற்பகல் 11:30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.
பாலமோட்டையில் நேற்று முன்நாள் பிற்பகல் 4:30 மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் பரிகாரிகண்டல் பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 2:00 மணியளவில் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
மன்னார் நாச்சிக்குடா தெற்கு பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 3:45 மணியளவில் மோட்டார் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
கிளிநொச்சி வன்னேரிக்குளம் மேற்கு பகுதியில் நேற்று முன்நாள் மாலை 5:00 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படையினர் இருவர் காயமடைந்தனர்.
காலை 8:30 மணியளவில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மீண்டும் முற்பகல் 11:45 மணியளவில் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
மணலாறு கிரி இப்பன்வேவ வடக்கு பகுதியில் நேற்று முன்நாள் முற்பகல் 9:45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
நெருடல் இணையம்
|