|
வவுணதீவில் பொதுமக்களிடம் சிறிலங்கா இராணுவத்தினரும், துணைக்குழுவினரும் கொள்ளை |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.
வவுணதீவு பிரதேசத்துக்கு உட்பட்ட விளாவெட்டுவான், ஈச்சந்தீவு, நாவற்காடு, கன்னங்குடா ஆகிய கிராமங்களில் அண்மைக்காலமாக இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றன.
இராணுவத்தினரும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை ஆயுதமுனையியில் குறிப்பாக பகலில் வீட்டில் இருக்கும் பெண்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தினை ஆயுதமுனையில் மிரட்டி கொள்ளையடித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தினால் அச்சமடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் படைத்தரப்பிடம் முறையிட்ட போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|