|
சிறிலங்காவுக்கு மத்திய அரசு ராணுவ உதவி அளிக்க கூடாது: ராமதாஸ்! |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
''சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியும் அளிக்கக்கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், வவுனியா தாக்குதலில் இந்திய ரேடார் கருவிகள் சேதம் அடைந்ததுடன் 2 இந்தியப் பொறியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்க ராணுவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஆட்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு சிறிலங்காவுக்கு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும். சிங்கள அரசுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.என்று ராமதாஸ் கூறினார்.
நெருடல் இணையம்
|