|
வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள் |
|
|
|
Friday, 12 September 2008 |
|
வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர்.
இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினையும் காணமுடிந்தது. இடமபெயாந்த மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது சிறிலங்காப்படையினரால் மக்களுக்கு ஏற்படும் அழிவுகள் பாதுகாப்புக்கள் என்பனவற்றின் சாட்சிகளாகவும் இந்நிறுவனங்களே இருப்பதால் வன்னியிலிருந்து இந்நிறுவனங்கள் வெளியேறினால் படையினர் பொதுமக்களாகிய தங்கள் மீது மேலும் தாக்குதல்களை அதிகரிக்கலாம் என அங்கு திரண்டிருந்து மக்கள் ஐ.நா.பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.
சில முதிய பெண்கள் வாய்விட்டு அழுத காடசயினையும் காணமுடிந்தது. தங்களின் தலைப்பீடத்துடன்தொடர்பு கொண்டு மக்களின் கருத்தக்களை தெரியப்படுத்துவதாக உலக உணவுத்திட்டம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழ் வின்
நெருடல் இணையம்
|