பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டோம்: ஐரோப்பிய ஒன்றியம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 22 September 2008
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அது அர்த்தமற்றது.

இலங்கையில் அமைதியான வழிகளில் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் எனபதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது.

எல்லாத்தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என நாம் பல தடவை வலியுறுத்தி வந்துள்ளோம். சிறிலங்கா அரசு மீது நாம் எதனையும் திணிக்கப்போவதில்லை.

சிறிலங்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளதாக சிறிலங்கா ஊடகங்களில் வெளிவந்த பத்திகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். அது அடிப்படை தவறானது.

சிறிலங்கா அரசு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழப்பதை நாம் விரும்பவில்லை.

எனினும் அதனைப்பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசு அதனை பின்பற்றும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..