|
மக்களின் துன்பங்களை கூறிய வவுனியா அரச அதிபர் இடமாற்றம் |
|
|
|
Tuesday, 23 September 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில்
கருத்து கூறியதற்காக வவுனியா மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர்
எஸ்.சண்முகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளைக்கு
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கான பணியும் அரசினால் தற்போது
வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நிக்கலஸ் பிள்ளைக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.
சண்முகத்தின் இடமாற்றத்திற்கான சரியாக காரணங்கள் எதுவும் அரசினால்
கூறப்படாத போதும், அண்மையில் உயர் அரச அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டம்
ஒன்றில் வவுனியா அரச அதிபர், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பாக
தெரிவித்த கருத்தே அதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து சண்முகம் நீக்கப்பட்டதாக பொதுச் சேவைகள் அமைச்சு காரணம் தெரிவித்துள்ளது.
புதிய அரச அதிபர் வவுனியாவுக்கு நியமிக்கப்படும் வரையில் அந்தப் பணிகளை
கவனிக்கும் படி நிக்கலஸ் பிள்ளையை பொதுச்சேவைகள் அமைச்சு பணித்துள்ளது.
நெருடல் இணையம்
|