|
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளினால் பாலியல் பலா |
|
|
|
Tuesday, 23 September 2008 |
|
திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேசத்திலுள்ள விடுதியொன்னினுள் வைத்து 18வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்குறித்த பெண் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்றவர் என்றும் இவர் குறித்த விடுதியில் தங்கியிருந்தபோது விடுதியை பரிசோதிப்பதற்காக அங்கு சென்ற 4 பொலிஸாரினால் பாலியல் பலாத்கதரம் செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பிரதேச பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகெட்டி ஆராய்ச்சி தெரிவித்தார்;.
மேற்படி சம்பவத்தில் 4 பொலிஸார் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 1பொலிஸ் உயர் அதிகாரி அடங்கலாக 3 கான்ஸ்டபில்களும் அடங்குவதாகவும் மேற்படி பொலிஸார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குறித்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவினுள் சேர்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|