|
கஞ்சிக்குடிச்சாறில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி இருவர் காயம் |
|
|
|
Wednesday, 24 September 2008 |
|
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஊடுருவ முயற்சித்தனர்.
ஊடுருவ முயற்சித்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தினர்.
இதில் சிக்கிய அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
நெருடல் இணையம்
|