|
வாளைச்சேனை கிண்ணியடியில் 40 இளைஞர்கள் படையினரால் கைது |
|
|
|
Wednesday, 24 September 2008 |
|
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்; போது 40 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 6.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை இராணுவம், காவல்துறையினர் கூட்டாக மேற்கொண்ட தேடுதலில் இப்பகுதி இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் பொருட்களையும் கடுமையான சோதனையிட்டதுடன் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது காலை வேளையில் வேலைக்கும், பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் வெளியில் செல்லயிருந்த சுமார் 40 இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|