பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் - கருணா முறுகல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 26 September 2008

20080924_ep03தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவுகள் தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குப் பதிலாக கட்சியின் உப தலைவராக ஜெயம் என்பவர் நேற்று இரவு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலின் உச்சகட்டமே இதுவென அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளராகவும் பிள்ளையானின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டு வரும் அசாத் மௌலானாவின் இடத்திற்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவாளி என அண்மையில் கருணா குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். இவர் தமது கட்சியில் நடப்பதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியப்படுத்துவதற்காகவே பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கருணா குற்றம் சுமத்தியிருந்தார்.

கருணா பிரித்தானியா சென்று மீண்டும் திரும்பி  வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பிள்ளையானும் அவரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை. இது அவர்களுக்கு இடையிலான முறுகல் தன்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..