|
ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாளில் தேசியத் தலைவர் பங்கேற்பு |
|
|
|
Friday, 26 September 2008 |
|
ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின்
திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார்.
ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரினது நினைவு நாள் நிகழ்வு
பிரேத்தியமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
கலந்து கொண்டு இம் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலைகளைச்
சூட்டி வணக்கம் செலுத்தினார்.
நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளும் கலந்துகொண்டு வணக்கம்
செலுத்தியுள்ளனர்.
நெருடல் இணையம்
|