பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

விமான மற்றும் தரைவழியில் - கண்மூடித்தனமான தாக்குதல்கள் - தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் திட்டமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 27 September 2008

அரச படையினர் விமானம் மூலமும்இ தரையில் இருந்தும் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மக்கள் நாளுக்கு நாள்இ இடத்திற்கும் இடம் நகர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். படையினரின் தாக்குதல்களால் மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியவில்லை.

உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள வீடுகளில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உறைவிடம். உணவு. குடிநீர், போன்ற அடிப்படை தேவைகளை இழந்துள்ளனர் எனவும் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல வழியின்றி இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வுத் திட்டம் இல்லை. தமிழ் மக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாகவும் இது தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் திட்டமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், நாட்டில் அனைத்து இடங்களிலும் இந்த நிலைமையைக் காணமுடிவதாகவும், அரசாங்கத்திடம் தீர்வுத் திட்டம் ஒன்று இல்லை என்பதுடன் அரசாங்கத்திற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் அவசியம் இல்லை எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு யோனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிரானவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனா.; அதேபோல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களும் உள்ளனர். நாட்டின் இறையாண்மையின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அறியவில்லை.

நாட்டின் இறையாண்மையைப் போலே மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகின்றனர் எனக் கூறப்படுவதை நம்பமுடியுமா என சம்பந்தனிடம் கேட்ட போது அதற்கு பதிலளித்துள்ள அவர், விடுதலைப்புலிகள் தமிழ் மக்களையும் அவர்களின் தாயகத்தையும் பாதுகாத்துக் கொடுக்கவே முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அதற்காகவே அவர்கள் தமது உயிரை துச்சமென மதித்து செயற்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மக்களை கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை நம்பமுடியாது, இது அரசாங்கம் புனைந்த கதை எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

வன்னியில் மக்கள் கஷ்டப்படுகின்றனர், அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் எதுவும் இல்லை, கர்ப்பிணித் தாய்மாருக்கு சிகிச்சையளிக்கப்படுவதில்லை, அங்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை, அவர்கள் மரண அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தாம் எப்போதும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கப் போவதாகவும், அரசாங்கம் செய்யும் அநீதி குறித்து சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..