|
வவுனியாவில் மேலுமொரு பெண் சுட்டுக்கொலை |
|
|
|
Sunday, 28 September 2008 |
|
வவுனியாவில் மேலும் ஒரு பெண் இனந்தெரியதாக ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளத்தில் சனி்க்கிழமை இரவு 11.45 மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைவாசியான சிவனேஸ்வரி அருட்சோதி என்ற குடும்பப்பெண்ணே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
வேப்பங்குளத்தில் நிரந்தரமாக வசித்துவந்த இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வசித்துவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|