|
கந்தளாய் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் : படையினர் நால்வர் பலி |
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய
தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப்
புலிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை கந்தளாய் பகுதியில் உள்ள சேரநாவ பகுதியில் அமைந்துள்ள காவலரனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதில்
சிறீலங்காப் படையினரும், சிறீலங்கா ஊர்காவல் படையினரும் காவல்கடமையில்
ஈடுபட்ட போது இக்காவலரண் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத தளபாடங்ளும்
விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
ரி56 ரக துப்பாக்கி 01
அதற்குரிய ரவைகள் 30
சொற்கண் 01
ஆகிய விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
நெருடல் இணையம்
|