பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

"கொழும்பினதும் கிழக்கு மாகாணத்தினதும் பாதுகாப்பினை முறியடிப்பதே புலிகளின் திட்டம்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 01 October 2008

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருகையில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்றவற்றின் மீது அதிரடி தாக்குதல்களை நிகழ்த்துவது விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு. 

இதனால் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.

கொழும்பில் தாக்குதலில் ஈடுபடும் நோக்குடன் விடுதலைப் புலிகள் பலர் முஸ்லிம் மக்களின் பெயர்களைக் கொண்ட அடையாள அட்டையுடன் நடமாடி வருகின்றனர்.

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரத்மலான இடைத்தங்கல் முகாம், இரத்மலான வானூர்தி நிலையம், கட்டுநாயக்கா வான்படை தளம் என்பனவே கொழும்பில் அவர்களின் பிரதான இலக்கு.

கிழக்கில் அம்பாறை மற்றும் திருமலை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதனிடையே அனைத்துலக ரீதியிலும் தமிழ் மக்கள் போர் தொடர்பான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம் முக்கியத்துவம் மிக்கது.

எனினும் அது தொடர்பாக மத்திய அரசின் பதில் என்ன என்பது தான் தற்போதைய கேள்வி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..