|
உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களை கொல்ல மகிந்த முயற்சி - மூன்று சிறுவர்கள் காயம்!! |
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
ஒரு நாட்டின் சிறார்கள் அந்த நாட்டின் எதிர்கால உரிமையாளர்கள்.அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரயத்தனமும் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டின் சகல சிறுவர் பராயத்தினர்க்காகவும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் செய்ததை விட தற்போதைய அரசாங்கம் முழுமையான பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறது.எவ்வாறிருப்பினும் மாறிவரும் சமூக,பொருளாதார மற்றும் கலாசார சு10ழலில் குடும்பத்தினுள்,பாடசாலையில் அதேபோன்று சமூகத்தில் சிறுவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்திருக்கும் செய்தியிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று உலக சிறுவர் தினம் கொண்டாடும் தினத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நடாத்திய மிலேச்சதனமான விமான குண்டு வீச்சில் பரந்தாமன் கௌரி(வயது03)தர்மன் கோகுலவாசன்(வயது04)இராமையா விஜயதர்சினி(வயது 16)ஆகிய மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்.
நெருடல் இணையம்
|