|
யாழ்ப்பாணத்தில் கோயில்களும் தேடுதல்களுக்கு உள்ளாகின்றன. |
|
|
|
Thursday, 02 October 2008 |
|
யாழ்ப்பாணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களில் படையினர் நேற்றும் இன்றும் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கந்தரோடைப் பிரதேசத்தில் உள்ள மாசியப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலின் அருகில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இந்த தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்தினத்தன்று மூன்று பேர் குறித்த இடத்தில் நின்றிருந்ததாகவும் படையினரின் வாகனம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்தே யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய், மானிப்பாய். தெல்லிப்பளை போன்ற இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்தே கோயில்களை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இந்து அமைப்புகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|