|
டென்மார்க்கில் கல்விகற்போருக்கான உதவித்தொகை தொடர்பாக சர்ச்சை |
|
|
|
Thursday, 20 October 2005 |
|
டென்மார்க்கில் கல்விகற்போருக்கான உதவித்தொகையை வெளிநாட்டு மாணவர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகச் சர்சை எழுந்துள்ளது. டென்மார்க் வழங்கும் இவ்வுதவித் தொகை மற்றய நாடுகளுகளுடன் ஒப்பிடு;ம்போது அதிகமானது. ஒரு வருடத்துக்கான இத்தொகை 55416 குரோன்கள். சில நாடுகளில் கல்விக்கான உதவித்தொகை மிகக் குறைவாகவோ அல்லது அதற்கான கடனை மட்டும் பெறமுடியும். இப்படியான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் டென்மார்க்கில் கல்விகற்றலைத் தெரிவு செய்வதன் மூலம் அவ்வுதவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இது தொடர்பாக சில இணையத்தளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
"உங்கள் கல்வி கற்கும் இடமாக டென்மார்க்கைத் தெரிவுசெய்யுங்கள், நீங்கள் மலிவான விலை உணவையோ, கூடாத வைனையோ தெரிவுசெய்யத் தேவையில்லை".என்ற கருத்தில் www.dinside.no என்ற இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. உதாரணமாக நோர்வே நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவக்கல்வியை டென்மார்க்கில் பயின்று வருகின்றனர். தற்போது உதவித்தொகையை பெற்றுவரும் மாணவர்கள் எண்ணிக்கை 12,113 ஆகும். இது 2000ம் ஆண்டுகளுடன் ஒப்பிடப்படும்போது 34சதவீதம் அதிகமாகும். Mohan
|