|
திருமலையில் கிளைமோர் தாக்குதல்: 2 கடற்படையினர் காயம் |
|
|
|
Friday, 03 October 2008 |
|
திருகோணமலை உப்புவெளி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற படையினர் மீதே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் ரோந்து சென்ற இரு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த மேலதிக படையினர் அங்கு தேடுதல்களையும் நடத்தினர்.
அண்மைக் காலமாக திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதும் தெரிந்ததே.
நெருடல் இணையம்
|