|
சிறுவர் தினத்தன்று பாதுகாப்பு படையினரினால் சிறுமியொருவர் மீது பாலியல் பலாத்காரம் |
|
|
|
Friday, 03 October 2008 |
|
சர்வதேச சிறுவர் தினத்தன்று பாதுகாப்புப் படைவீரர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவரும் இணைந்து 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலைச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு பாதுகாப்புப் படைவீரர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தந்திரிமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|