|
மீண்டும் திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம் |
|
|
|
Saturday, 04 October 2008 |
|
கடந்த ஒன்டரை மாதங்களாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என்.பத்மாநாதன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் எந்தவித தடையுமின்றி முன்னெடுத்துச்செல்லப்படும் என அவர் கூறினார்.
கிழக்குப் கல்கலைக்கழகத்தின் வர்த்த பீடத்தை சேர்ந்த இறுதியாண்டு சிங்கள மாணவர் ஒருவர் இனந்தெரியாத நபகர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள மாணவர்க்ள அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மூதவையின் தீர்மானத்துக்கு அமைய பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க முடிவுசெய்யப்பட்டதாகவும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் உபவேந்தர் பத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழகம் மூடப்பட்டததால் இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் கிழக்;குப் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|