|
வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் பிள்ளையான் பங்கேற்பு |
|
|
|
Saturday, 04 October 2008 |
|
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான பிள்ளையான் பங்குபற்றியுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்படுகின்ற போதும் மாகாண முதலமைச்சர்களின் பங்கேற்பும் அவசியமானது என்று ஜனாதிபதி வழங்கிய தீர்மானத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
வாரந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். எனினும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
மாகாண சபைத்தேர்தல் முறையை மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்தில் ஆராயப்படவிருந்த போதிலும் அது தொடர்பில் கலந்துரையாடலை இரண்டு வாரத்திற்கு பின்னர் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத்தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான யோசனைக்கு மேலும் சில யோசனைகள் கிடைத்துள்ளமையினாலேயே இது தொடர்பில் இரண்டு வாரத்திற்கு பின்னர் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|