|
சிறிலங்காவின் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
கடைந்தெடுத்த தீவிர இனவாதி இவர் ராணுவத்தில் இருந்து தமிழர்களை அழித்தது காணாது என்று அரசியலுக்கும் வந்தார் ஆனால் அது நிறைவேறுவதற்கு முதலே முடிவு வந்துவிட்டது.இவரது பாதுகாப்பு சம்பந்தமாக அரசு முரண்பட்ட நிலையில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சிரச ஊடகத்தின் அனுராதபுர செய்தியாளர் மொகமட் நஸ்மியும் அடங்குவர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அனைவரும் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரப்போரில் முதன்மைப் பங்கை வழங்கிய அதேவேளை பெருமளவில் தமிழின அழிப்புக்கும் காரணமாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா.
யாழ். செம்மணி படுகொலைகளின் சூத்திரதாரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
theivam
|