|
இலங்கையின் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை |
|
|
|
Monday, 06 October 2008 |
|
இலங்கையின் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்த போதும் பின்னர் அவற்றை விடுவித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் நேற்று கச்சதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் "யோகவா" மீனவ சங்கத்தின் தலைவர் ஜேசுதுரை, இது தொடர்பாகக் கூறுகையில், இந்திய மீனவர்களைச் சுற்றிவளைத்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் வலைகளைப் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் மீனவர்களை சுமார் அரை மணித்தியாலங்களாக கடலில் நீந்துமாறு பணித்த பின்னரே விடுவித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நெருடல் இணையம்
|