|
அவசரகாலச் சட்டம் 84 மேலதிக வாக்குகளால் மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பு! |
|
|
|
Tuesday, 07 October 2008 |
|
அவசரகாலச் சட்டம் 84 மேலதிக வாக்குகளால் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசுடன் இணைந்து தேசிய சுசந்திர முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.வாக்களிப்பின்ப�
��து ஐ. தே. கட்சி மற்றும் ஜே. வி. பி. ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
இதேவேளை, ஐ. ம. சு. முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமானம் செய்துகொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
நெருடல் இணையம்
|