|
மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி உளவாளி சுட்டுக்கொலை |
|
|
|
Thursday, 09 October 2008 |
|
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் ரி.எம்.வி.பியினருக்கு தகவல் வழங்கிவந்த நபர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் கொக்குவில் 1ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கு சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகள் குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 1ம் குறுக்கு வீதியில் சடலமாக காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் 33 அகவையுடைய கதிர்காம போடி மேகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு காவல்துறையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளது.
நெருடல் இணையம்
|