|
மட்டக்களப்பு காத்தன்குடியில் இன்றும் சடலம் மீட்பு |
|
|
|
Saturday, 11 October 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான் குடி காவற்துறைப் பிரிவில் இன்றும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவலடி கடலாராட்சி அம்மன் ஆலையத்திற்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழுதடைந்த சடலத்தை தகவல் ஒன்றின் அடிப்படையில் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு மன்பு கொல்லப்பட்டு இந்த சடலம் புதைக்கப்பட்டு இருக்கலாம் என காவற்துறையினர் கூறுகின்றனர். இனம் காணப்படாத இந்த சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள், மற்றும் சுற்றி வளைப்புகளில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் கொல்லப்பட்டு பின் சடலங்களாக மீட்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காட்டப்படும் நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|