|
களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் கொலை 3 பேர் காயம் |
|
|
|
Saturday, 11 October 2008 |
|
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கை நேரம் இன்று மாலை 6.30 அளவில் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு அருகாமையில் ரீ.எம்.வீ.பீயினரால் நடத்தப்படும் மதுபானச் சாலைக்கு முன்பாக ஏனைய உறுப்பினர்களுடன் கூடி நின்ற வேளை பிரவேசித்த இனம்தெரியாதோர் இவரைச் சுட்டுக் கொன்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக் கொல்லப்பட்டவர் ராஜன் என அழைக்கப்படும் சாதுரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயம் அடைந்த ஏனைய 3 உறுப்பினர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|