|
மணலாறில் படையினரின் முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 19 படையினர் பலி; 35 பேர் காயம் |
|
|
|
Monday, 13 October 2008 |
|
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக தழிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த்தாக்குதலினால் படையினரின் முன்னேற்ற முயற்சி கைவிடப்பட்ட நிலையில் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இம்முறியடிப்புத் தாக்குதல் மாலை 5.45 மணி வரை நீடித்தது. இதன்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 படையினர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் இறந்த படையினரின் 2 சடலங்களும் ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|