|
பேராறு பாலம் சிறீலங்காப் படையினரால் குண்டு வைத்துத் தகர்ப்பு |
|
|
|
Tuesday, 14 October 2008 |
|
சிறீலங்காப் படையினரால் பேராறு பாலம் வெடிகுண்டு பொருத்தப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் - ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேராறு மேலாக அமைந்துள்ள பாலமே சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா படையினரின் யுத்த முன்னெடுப்புகளை அடுத்து, ஏ9 நெடுஞ்சாலையின் பாவனை தவிர்க்கப்பட்டு, மாங்குளம் - ஒட்டிசுட்டான் பாதை ஊடாகவே ஐ.நா தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கான மனித நேயப் பொருட்கள் பாரவூர்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பாலத்தில் மீது சிறீலங்கா வான் தாக்குதலையும், எறிகணைத் தாக்குதலையும் நடத்தியதோடு, ஆழ ஊடுருவும் அணியினரை நகர்த்தி பாலத்தின் மீது குண்டினைப் பொருத்ததி தகர்த்துள்ளனர்.
படையினரின் இந்த நடவடிக்கையிலான் வன்னிக்கான போக்குவரத்துகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன
நெருடல் இணையம்
|