|
சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜித் |
|
|
|
Saturday, 01 November 2008 |
|
இன்று சென்னையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடாத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அஜித் உரையாற்றியுள்ளார்.
அந்த உரை ஒரு நிமிடத்துக்குட்பட்டததாக அமைந்திருந்தது. அவர் இந்த உண்ணாவிரதப் போராட்ட உரையில் கூற வந்ததே வேற ஒன்றாக அமைந்திருக்கையில் அதில் சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள் என்ற கருத்தையே முன்வைத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடத்திய இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் அஜுத் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து மக்களின் கொந்தழிப்பால் சில நாடுகளில் அஜுத்தின் புதிதாக வெளியாகிய ஏகன் திரைப்படம் ரத்து செய்யப்பட்டிருந்த இந்த நிலையில் அஜுத் இன்று ஆற்றிய உரையில் மீண்டும் சர்சயாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுமானால் ஏன் சினிமா சங்கம் ஈழத்தமிழருருக்காக அணி திரண்டு இந்தப் போராட்டம் நடத்த வேண்டும்?? ஏன் அஜுத் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போரத்தில் கலந்து கொள்ள வேண்டும்? இந்த அஜுத்தின் கருத்திலிருந்து இந்த போராட்டம் ஒன்று தேவையில்லை. இதை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதுதாகவே தென்படுகிறது.
நெருடல் இணையம்
|