|
ஒட்டுக்குளு உறுப்பினர்கள் நால்வர் இன்று இரவு கல்முனையில் சுட்டுக்கொலை |
|
|
|
Sunday, 02 November 2008 |
|
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குபட்ட குருந்தையடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 4 கருணா குழுவினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 குருந்தையடி,ரெஸ்ட் ஹவுஸ் வீதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் உள்ள மதுபான சாலையொன்றில் குறித்த ஐந்து பேரும் நின்றுகொண்டிருந்தபொது அப்பகுதியில்; மறைந்திருந்த ஆயுததாரிகள் சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டுதப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் இருவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நெருடல் இணையம்
|