|
அம்பாறையில் துக்கதினத்தை முன்னெடுக்குமாறு ரிவிஎம்பி ஆயுததாரரிகள் மிரட்டல் |
|
|
|
Monday, 03 November 2008 |
|
அம்பாறை கல்முனை ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இன்று அப்பகுதியில் துக்க தினம் அனுஸ்ட்டிக்குமாறு ஆயுதக்குழுவினர்களினால் வர்த்தகர்கள் மிரட்டல் கல்முனை பொதுச்சந்தியிலிருந்து பாண்டிருப்பு வரையிலான தமிழர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு துக்க தினம் அனுஸ்ட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் போக்குவரத்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீதியில் மக்களின் நடமாற்றம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு வாடி வீடு வீதியில் இனம் தெரியாத ஆயுததரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நான்கு ரி.எம்.வி.பியினர் கொல்லப்பட்டுள்ளார்கள் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காமையினால் அவர் இன்று உயிரிழந்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கல்முனை காவல்துறையினர் இத்தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|