|
நோர்வேயில் தீப்பந்த பேரணி! |
|
|
|
Friday, 21 October 2005 |
|
எழுவோம் தமிழின உரிமைக்காக" எனும் பொங்குதமிழ் தீப்பந்த எழுச்சிப்பேரணி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.1,500-க்கும் மேற்பட்ட நோர்வே வாழ் தமிழ் மக்கள் இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு, தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டின் பலத்தினையும் உணர்வெழுச்சியினையும் வெளிப்படுத்தினார்கள். தமிழீழத் தாயக மக்களின் நீதியானதும் உண்மையானதுமான விடுதலைக்காக தமது ஒருமித்த குரலை புதிய நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் வலியுறுத்தினார்கள்.
ravi
|