பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ரகுவின் படுகொலையின் பின்னணியில் விடுதலைப் புலிகள்: கருணா தெரிவிப்பு; பிள்ளையான் மறுப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ரகுவின் படுகொலையின் பின்னணியில் விடுதலைப் புலிகள்: கருணா தெரிவிப்பு; பிள்ளையான் மறுப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 November 2008

பிள்ளையானின் இணைப்பு செயலாளர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் கொலையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ரகு பாதுகாவலர்கள் அற்ற நிலையில் தனியாக செல்வதில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சரின இணைப்பு செயலர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் கொலைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த கொலையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பது தமக்கு தெளிவாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை பாணியில் இந்த கொலை அமையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டிருந்த இடத்தை தாம் நேரில் சென்று பார்த்ததாகவும் அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் இந்த கொலையை மேற்கொண்டார்கள் என்பதற்கான எந்த சான்றும் இருக்கவில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..