|
யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணை |
|
|
|
Wednesday, 19 November 2008 |
|
யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக, யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகள் பலாலியில் மையப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததை எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
முகமாலையூடாக முன்னேற முற்பட்ட படையினரை வழிமறித்து தாக்கியவாறே விடுதலைப் புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே சிறீலங்கா படையினர் முகமாலை மற்றும் பளைப் பகுதியில் கடும் வான்வழி வானூர்தித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
பூநகரியைக் கைப்பற்றினால் விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகளால் தாம் இலக்குவைக்கப்பட மாட்டோம் என்ற சிறீலங்கா அரசின் பரப்புரையை விடுதலைப் புலிகள் தமது இந்தத் தாக்குதலின் மூலம் தகர்த்துள்ளனர்.
நெருடல் இணையம்
|