|
மாவீரர்களின் ஈகத்தால் நகரும் தமிழர்களின் போராட்டம்: கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் |
|
|
|
Thursday, 20 November 2008 |
|
மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் விநாயகம் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாவது:
சிங்கள படைகளின் போர் வல்வளைப்புக்களை உடைத்தெறிந்து மக்களை காப்பதில் மாவீரர்கள் தமது இன்னுயிர்களை இந்த மண்ணுக்கு ஆகுதியாக்கியுள்ளனர்.
மாவீரர் ஒவ்வொருவரின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்பட வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக்கடமை ஆகும். அது மட்டுமல்லாது மாவீரர்களின் கனவை நனவாக்க வேண்டியதும் தமிழர்களின் பணியாகும்.
மாவீரர்களின் கனவுகளைச்சுமந்து சிங்கள படைகளை எதிர்கொண்டு தமிழர்கள் வெற்றி பெற்றுக்கொள்வதே இன்றைய வரலாற்றுக்கடமையாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|