|
தீவிரப் போக்குடைய இஸ்லாமியர் செயட் மனசூர்; கைது! |
|
|
|
Tuesday, 13 September 2005 |
|
டென்மார்க்கில் தொடர்ந்து பத்திரிகைகளில் பேசப்பட்டு வந்தவரான செய்யட் மன்சூர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பிரச்சார இறுவட்டு இங்குள்ள இஸ்லாமிய இளைஞரை ஈராக் போர்க்களம் போகும்படி துர்ண்டியிருந்தது. இந்த இறுவட்டை விநியோகித்ததுடன் இவரைத் தொடர்புபடுத்தி முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. இவரது நடவடிக்கைகளை கடந்த பத்து மாதங்களாக ஒற்றறிந்து போதிய தகவல்களைச் சேகரித்த பின்னர் இவரை கைது செய்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. 1983 ம் ஆண்டு மொறோக்கோ தேசத்திலிருந்து டென்மார்க் வந்த இவர் டேனிஸ் குடியுரிமை பெற்றவர். இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட டேனிஸ் பெண்மணி ஒருவரை மணமுடித்துள்ளார். இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய அபாயம் உள்ளது.
நெருடல் இணையம்
|