|
காஸா- எகிப்து எல்லை மூடப்படும் |
|
|
|
Tuesday, 13 September 2005 |
|
மத்தியக்கிழக்கில் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படையினர் விலகியதை அடுத்து இரண்டு நாட்களாக இருந்துவரும் குழப்ப நிலையை அடுத்து, காஸா பகுதி - எகிப்து இடையிலான எல்லை இன்று நள்ளிரவு மூடப்பட இருக்கிறது. அதற்குள் மக்கள் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று தெற்கு காஸா பகுதி பாலஸ்தீனத் தளபதி ஜமால் கையித் எச்சரித்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படை முற்றுமாக விலகிடயதை அடுத்து எல்லைப் பகுதியில் திரண்டுவிட்ட ஆயிரக்கணக்கான மக்களை சமாளிப்பதில் எகிப்து மற்றும் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். BBC
|