|
சீலிடப்பட்ட பெட்டி வேண்டுமா? உயிரோடு பிள்ளைகள் வேண்டுமா?: சிறிலங்கா அரசியல்வாதிகளின் நலன்களுக்கான உங்கள் பிள்ளைகளை இராணுவத்தின் இணைத்து பலிகொடுப்பதை நிறுத்தி அவர்களை இராணுவத்திலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள் என்று சிங்கள மக்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அன்பார்ந்த பெற்றோரே! நாங்கள் உங்களுக்கு அனுப்பும் முதலாவதும் அவசரமானதுமான மடல் இதுவாகும். இதன் மூலம் எங்களின் கருத்துக்களை தெரிவிப்பதே எமது நோக்கம். உங்கள் பிள்ளைகள் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை அறிவீர்களா? எங்களது பெண் பிள்ளைகள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளது. மாலை 6 மணிக்கு பின்னர் வெளியில் செல்லும் பெண் பிள்ளைகள் வீட்டிற்கு வர முடியாத நிலை உள்ளது. உங்கள் புதல்வர்கள் தாய், அக்கா, தங்கைகளுடன் வாழ்ந்திராத காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் யாழ். அச்சுவேலியில் 68 வயது வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கையில் படையினர் அவர் மீது பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயன்றுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் புங்குடுதீவில் 20 வயதான தர்சினி எனப்படும் எமது சகோதரியை படைவீரர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கல்லுடன் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் நாளாந்தம் எமது பிரதேசத்தில் நிகழ்வதை நீங்கள் அறிவீர்களா? உங்களின் புதல்வர்கள் இராணுவத்தில் இணைந்த பின்னர் காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொள்கின்றனர். படைவீரராக இவ்வாறு செயற்பட்டு சம்பாதிப்பதை விட பிச்சை எடுத்தல் உத்தமம். எமது மக்களைக் கொன்று எமது சொத்துக்களை கொள்ளையிட்டு எமது தாய்மாரின், அக்காமாரின், தங்கைமாரின் கற்பை சூறையிட்டு உழைக்கும் பணத்திலேயே நீங்கள் வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதை மறவாதீர்கள். ஏன் உங்கள் புதல்வர்களை இந்த ஈனத்தொழில் ஈடுபட அனுமதிக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தாய்மாரே ஒருநொடி யோசித்து உடனடியாகச் செயற்படுங்கள். உங்களுக்கும் பெரிய வீடொன்றை நிர்மாணிக்க ஆசையாக இருக்கும். எனினும் இந்தப் பணத்தில் வீடொன்றை நிர்மாணிக்க நினைக்காதீர்கள். அதுவெட்கமன்றி தேடிய பணமாகும். நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பயனுள்ள வகையில் செயற்படுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் மகன்மாரின் மரணம் நிச்சயம். ஏன் எங்கள் மக்களுக்கு இவ்விதம் செய்கிறீர்கள்?. இராணுவத்தினரால் எங்களில் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டாலோ அல்லது பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டாலோ பொங்கியெழும் மக்கள் படையாகிய நாம் அதற்குப் பழிவாங்கத் தீர்மானித்துள்ளோம். ஒரு தமிழர் கொல்லப்பட்டால் 25 படைவீரர்கள் கொல்லப்படுவார்கள். இதனால் உங்கள் மகனும் கொல்லப்படலாம் என்பதால் உங்கள் மகனுக்கு இராணுவத்தை விட்டு வருமாறு கூறுங்கள். இல்லையேல் உங்கள் புதல்வரின் சடலத்தையே பார்க்க வேண்டியேற்படும். அதுவும் அனேகமாக பாதிப்படைந்திருக்க இடமுண்டு. சீல் செய்யப்பட்ட பெட்டிகள் தேவையா? இல்லையேல் மகனின் உயிர் தேவையா என தீர்மானியுங்கள். காலத்தை வீணடிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு உங்கள் மகனின் உயிரைக் காத்துக்கொள்ளுங்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தேவை தாங்கள் சொகுசாக வாழ்வதே. படை வீரர்களின் உயிரைப்பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்கமாட்டார்கள். அவ்வாறில்லாவிட்டால் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பிரிட்டனில் பெரிய மாளிகையொன்றை வாங்கியிருப்பாரா? தயா சந்தகிரி இருபத்தியொரு கோடி ரூபா செலவிட்டு மாளிகையொன்றை நிர்மாணிப்பாரா? இவ்வாறு உங்கள் பிள்ளைகளின் உயிரைப் பலி கொடுத்துவிட்டு அவர்கள் கோடீஸ்வரராகின்றனர். பெற்றோரே உடனடியாக செயற்பட்டு உங்கள் பிள்ளைகளின் உயிரைக் காத்துக் கொள்ளுங்கள். இந்த இனவாதத் தலைவர்களின் பேச்சைக் கேட்டு உங்கள் பிள்ளைகளின் உயிரைப் பலி கொடுக்காதீர்கள். உங்கள் மகன்மாருக்கு இராணுவத்தை விட்டு வரச் சொல்லுங்கள். இல்லையேல் மரணம் நிச்சயம். மீண்டும் யுத்தமொன்றிற்கு தயாராகும் அரசியல் தலைவர்களில் எவரின் புதல்வராவது இராணுவத்தில் உள்ளனரா? ஜே.வி.பியினரின் பிள்ளைகள் இங்கிலாந்தில் இருக்கையில் உங்கள் பிள்ளைகள் மாத்திரம் இங்கு உயிரிழக்கின்றனர். ஹெல உறுமய எனும் இனவாதக் கட்சி யுத்தத்தை விரும்பலாம். எனினும் அவர்கள் வாயால் மாத்திரம் யுத்தம் செய்பவர்கள். ஏழை இளைஞர்கள் உயிரிழக்கையில் இவர்கள் இரவு விடுதிகளில் சந்தோசமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டு வெறுமனே கூச்சலிடுகின்றனர். மகிந்தருக்கு கூறுங்கள் அவரின் ஒருபுதல்வரை இராணுவத்திற்கு அனுப்புமாறு. சோமவன்ச அமரசிங்கவிற்குக் கூறுங்கள் இங்கிலாந்தில் இருக்கும் அவரின் புதல்வரை இராணுவத்திற்கு அனுப்புமாறு. விரும்பினால் அவர்களும் யுத்தத்திற்கு வருமாறு கூறுங்கள். ஜே.வி.பியினருக்கு யுத்தம் தேவையாயின் இராணுவத்தில் இணையச் சொல்லுங்கள். வீராப்பு கதைக்கும் அவர்களுடன்தான் நாம் யுத்தம் செய்ய விரும்புகிறோம். ஏதும் அறியாத உங்கள் மகன்மாருடன் அல்ல. வீரவன்ச, சோமவன்ச, டில்வின் சில்வா, எல்லாவெல மேதானந்த ஆகிய அடிப்படைவாதிகளை யுத்தகளத்தில் சந்திக்க நாம் விரும்புகிறோம். முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகியிருந்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம், ஜயசிக்குறு நடவடிக்கை, கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம்களில் இருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்கள் உயிரிழந்தனர். எனினும் அந்தப் படைவீரர்கள் பற்றி இந்த தலைவர்கள் ஒருகணமேனும் சிந்தித்தார்களா? ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்த சந்திரிகா தனது மகளுக்கும் மகனுக்கும் இங்கிலாந்தில் உயர் கல்வியைப் பெற்றுக்கொடுத்தார். ரத்வத்தை தனது பிள்ளைகளை போராடுவதற்கு அனுப்பினாரா? பெற்றோரே உங்கள் பிள்ளைகளை எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியிருப்பீர்கள். நாம் அதனை அறியாதவர்கள் அல்ல. தற்போதைய அரச தலைவரும் தற்போதைய இராணுவத் தளபதியும் தங்களின் வாழ்க்கையை உயர் தரத்தில் கொண்டு நடத்துவதற்கு உங்களின் புதல்வரின் உயிரைப் பலி கொடுக்கத் தயாராகின்றனர். இதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் உங்கள் பிள்ளையை இராணுவத்திலிருந்து விலகச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையை மாத்திரம் எதற்காக யுத்தத்திற்கு அனுப்புகிறீர்கள். அவர் உயிர்வாழ்வதனை நீங்கள் விரும்பவில்லையா? தாய்மாரே, தந்தைமாரே! இதனை பலமுறை வாசியுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுங்கள். இதுபற்றி விரைவில் சிந்தித்து நடவடிக்கை எடுங்கள். காலத்தை வீணடிக்காதீர்கள். விடுமுறையில் வீடு வரும் உங்கள் மகனை மீண்டும் இராணுவத்திற்குச் செல்ல அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால் அவரைப் பார்க்கும் கடைசி சந்தர்ப்பம் இதுவென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெருடல் இணையம்
|