புலி மகன்!
-
இவ் விடயம் 27. 11. 2009, (சனி),
தமிழீழ நேரம் 19:47க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்…!
சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு
மனித குழந்தையாக
இருந்த நீ
புலி மகனானாய்…
அசைய அசைய
கையும் காலும் கூட
ஆயுதமானது…!
புலியும் வேண்டாம்
சிங்கமும் வேண்டாம்
மனிதர்களை
மனிதர்களாக வாழவிடுங்கள்
என்றார்கள்
சமாதானப் குருட்டு சிங்கங்கள்!
தமிழனின்
சதைத் தூண்டு
வாயில் தொங்கும்
சிங்கள சிங்கத்திற்கு
உங்கள் மனித பாஷை
எப்படிடா கேட்கும்?
அட ,அறிவு கெட்ட மடப் பதரே!
புலிகள் எல்லாம் காலி
எனற
சொன்ன சிங்கள சிங்கங்கள்
பாதுகாப்பாய்
பதுங்கியபடி
புலிக் காய்ச்சலோடு…
புலியடிக்கும் வரை…
புலிக் காய்ச்சல்
உங்களைக் கொல்லும்…!
|
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை
தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில
உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
நன்றி |
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
3 Comments on “புலி மகன்!”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


புலி மகன்.ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்
good poem
தணியா விடுதலை தந்தவித்து
தமிழினம் பெற்ற தனிசொத்து
பணியா மானம் பகர்ந்த முத்து
பகைவெல்வாய் தடை உடைத்து