புலி மகன்!
- இவ் விடயம் 27. 11. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:47க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்…!
சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு
மனித குழந்தையாக
இருந்த நீ
புலி மகனானாய்…
அசைய அசைய
கையும் காலும் கூட
ஆயுதமானது…!
புலியும் வேண்டாம்
சிங்கமும் வேண்டாம்
மனிதர்களை
மனிதர்களாக வாழவிடுங்கள்
என்றார்கள்
சமாதானப் குருட்டு சிங்கங்கள்!
தமிழனின்
சதைத் தூண்டு
வாயில் தொங்கும்
சிங்கள சிங்கத்திற்கு
உங்கள் மனித பாஷை
எப்படிடா கேட்கும்?
அட ,அறிவு கெட்ட மடப் பதரே!
புலிகள் எல்லாம் காலி
எனற
சொன்ன சிங்கள சிங்கங்கள்
பாதுகாப்பாய்
பதுங்கியபடி
புலிக் காய்ச்சலோடு…
புலியடிக்கும் வரை…
புலிக் காய்ச்சல்
உங்களைக் கொல்லும்…!
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
4 Comments on “புலி மகன்!”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



புலி மகன்.ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்
good poem
தணியா விடுதலை தந்தவித்து
தமிழினம் பெற்ற தனிசொத்து
பணியா மானம் பகர்ந்த முத்து
பகைவெல்வாய் தடை உடைத்து
ஐயா சுகிசிவம் அவர்களே! தாங்கள் ஒரு அறிவுக்களஞ்சியமேதான்; ஒப்புக்கொள்கிறோம்.
ஆனாலும் தங்களிடம் பொதிந்துள்ளஅறிவு, கொஞ்சம் அளவுகடந்துதுவிட்டதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
தங்கள்பாணியிலேயே இதற்கு விடையளிக்க விரும்புகிறேன்.
‘அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும்நஞ்சு’ என்பது ஆன்றோர்வாக்கு.
நிரம்பி ‘வழியும்’ அறிவுகொண்ட தங்களுக்கு இந்தச்சின்னவகுப்புப்பாடம் தெரியாமலிருக்க நியாயமில்லை.
ஆனால், தாங்கள் இதிற்கையாண்ட சொற்பதங்களை அவதானித்தால், ’வெளிநாடுகளில் வாழ்பவர்களெல்லாம் சொகுசாகவாழ்கிறார்கள்’ எனும் பொறாமைதான் அதிற்பளிச்சிடுகிறது.
உண்மையிலேயே,அந்தமக்களுக்கு உதவுவதுதான் தங்கள்நோக்கமாக இருந்திருந்தால்:
‘எமதுமக்களுக்கு நாம் உதவாமல், வேறுயார் உதவுவார்கள்? அனைவரும்சேர்ந்து கைகொடுப்போம் வாருங்கள்!’ என்பதுபோலத்தான் அமைந்திருக்கவேண்டும்.
இதைவிடுத்து, ‘ உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்’ என்பதை, ஏதோ ஆரம்பப்பள்ளிஆசிரியர்போல அழுத்திச்சொல்லியிருக்கவேண்டிய அவசியமில்லை.
இந்த உயிரின்மீது யாருக்குத்தான் ஆசையில்லை. உங்களுக்கில்லையா?
இல்லையேல் நீங்கள் தமிழர்இல்லையா? வாய்ப்புக்கிடைத்தால் எவரும் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளத்தான் செய்வார்கள் என்பது,மேதாவிகளுக்கு மட்டுமே புரியுமென்பதுமில்லை.
முள்ளிவாய்க்காலில் நமதுசொந்தங்கள் பதைக்கப்பதைக்க உயிரோடுபுதைக்கப்பட்டபோது, தாங்கள்எங்கு சந்திரமண்டலத்திலா இருந்தீர்கள்?
மேற்கத்தையநாடுகளில்வாழ்பவர்களைவிட, மிகஅருகில்-தாய்த்தமிழகத்திற்றானே இருந்தீர்கள்?
உங்கள் தொப்புள்கொடிஉறவுகளுக்குஉதவ, கால்நடையாகவேஅங்கு ஓடியிருக்கவேண்டாமோ?
சரி;அதுதானில்லை…அந்தஅவலங்களை நிகழ்த்தியவர்களுக்கெதிராக ஒருகுரலாவது கொடுத்திருக்கலாமே!
அந்தநேரத்தில்,அங்கு வீடுமட்டுமா இல்லாமலிருந்தது?
காடையர்கள்வீசிய கொத்தணிக்குண்டுகள்,இரசாயனக்குண்டுகளால் சுத்தமான காற்றே இல்லாமற்றானிருந்தது.
உண்ணஉணவில்லை; குடிக்கநீரில்லை; நிற்கவே இடமில்லை.
உடுக்கஉடையில்லை; ஏன்? உயிரேஇல்லை.
இல்லை இல்லை இல்லை இல்லை!
எங்கும் இல்லைமயமாகவே இருந்ததே!
அப்போது தாங்கள் என்னசெய்துகொண்டிருந்தீர்கள்?
ஒருவேளை இராமாயணசீதை அசோகவனத்திற்பட்ட அல்லலைநினைத்து அழுதுகொண்டிருந்தீர்களோ?
அழுதுகளைத்துவந்த கும்பகர்ணத்தூக்கத்திலிருந்து, இப்போதுதான் விழித்துக்கொண்டீர்களோ?
இவ்வளவுக்கும் திறவாதவாயை, தற்போது திறக்கவேண்டிய அவசியந்தான் என்ன?
கம்பன் கழகப்பட்டிமன்றம் எனும்போர்வையில் கொழும்புக்குச்சுற்றுலாச்சென்று, வீடுவீடாக விருந்துண்டு மகிழ்ந்தமைக்கு நன்றிக்கடன்செலுத்தவா?
மேற்கத்தையநாடுகளில்வாழும்தமிழர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர் சுற்றத்தார் ஆகிய இரத்தசொந்தங்களே ஈழத்தில்வாழ்கின்றனர்.
அக்கறையில்லாமலா அவர்களெல்லாம் ஆயிரக்கணக்கில்- இலட்சக்கணக்கில், கொட்டும்பனியையும் பொருட்படுத்தாது தெருவிலிறங்கிப் போராடினார்கள்?
அந்தப்போராட்டந்தானே இன்று, பலவழிகளில் அடக்கிவாசிக்கும்படி சிங்களத்தை மேற்குலகநாடுகள் வற்புறுத்தக்காரணமாய் அமைந்தது?
அதுமட்டுமா? ‘வணங்காமண்’ கப்பல்நிறைய அவசர உதவிப் பொருட்களை அனுப்பிவைத்தார்களே!
அதைக்கூட, அவர்களுக்குக்கிடைக்கவிடாமல், உங்கள் ‘பெரியண்ணன் மகிந்தா’ தடுத்துவைத்ததை அறியாமலா இருந்தீர்கள்?
அக்கப்பல் சென்னைக்கும் வந்ததே! உள்ளூர்ச்செய்திகூடவா கிடைக்கவில்லை?
‘பிறர் கொடுப்பதைத்தடுப்பது பெரும்பாவம்’ என்பதற்கமைய, இப்பெரும்பாவத்தைப்புரிந்த அயோக்கியர்களுக் கெதிராகக்குரல் கொடுப்பது சான்றோர்களின் கடமை என்பது, தாங்கள் படித்த ஒரு புத்தகத்திற் கூடவா இல்லாமற்போயிற்று?
அவர்களின் சொந்தஉறவுகளின் மனநிலை, அவர்களைவிடவும், ஒரு நாள் போய் விருந்துண்ட உங்களுக்கு அதிகமாகப்புரியும் என்றுநினைக்கிறீர்களா?
ஈழமக்களைப்பொறுத்தவரை, கஷ்டங்கள்-துன்பங்கள் என்பது _ இன்றுநேற்றல்ல! காலங்காலமாகவே பழகிப் போன சங்கதி. ஒருவீடு மட்டுமல்ல! கிராமம்கிராமமாகவே வீடுகளைச்சிங்களரிடம் பறிகொடுத்தவர்கள்!
அவர்கள், வெளிநாட்டிலுள்ளவர்களின்வீடுகளை வாங்கித்தரும்படி, உங்களைத் தூதனுப்பியிருக்கிறார்கள் என்கிறீர்கள். இது நம்பக்கூடியதாகவா உள்ளது?
நிச்சயமாக நீங்கள் விருந்துண்டஇடம், ஒரு தமிழினத்துரோகியின் வீடாகத்தான் இருக்கவேண்டும்.
ஏனெனில் நாமறிந்தவரை, இத்துரோகிகள்தாம் ஈழத்தில் மட்டுமல்லாது அனைத்துலகமட்டத்திலும், இக்கட்டான இந்த நேரத்தைப்பயன்படுத்தி, மக்களின் தன்மான உணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் ’யானைபார்த்த குருடனாக’ , துரோகிகளைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு துரோகத்துக்கொரு கருவியானமை துரதிஷ்டமானதே!
உங்கள் கருத்துப்படிபார்த்தால், தமிழகத்திலேயே வீடற்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்களல்லவா?
அவர்களில் ஒருவருக்கேனும் உங்கள்வீட்டுக்கொல்லைப்புறத்திலாவது இடங்கொடுத்திருக்கலாமே!
கோவணத்துக்கும் வழியற்ற அந்தமக்களுக்கு,தோளிலணிந்திருக்கும் துண்டையேனும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே!
‘ஊருக்குபதேசம் உனக்கல்லடி’ என்றகதையாகத்தான் உள்ளது உங்கள்பேச்சு!
வெளிநாடுகளில் வாழ்வதுபற்றி இவ்வளவு ஏளனமாகப்பெசுகிறீர்களே!
சொந்தமக்கள் வெள்ளையனிடம் வதைபட்டுக்கொண்டிருந்த அந்தநேரத்தில்
உங்கள்காந்தியாரும் பட்டப்படிப்பும் பகட்டுவாழ்க்கையும் என்று இங்கிலாந்தில்இருந்தவர்தானே!
அதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்தவரையிலும் சொந்தமக்கள்பட்ட துன்பங்களைக் கண்டுகொள்ளாமலிருந்துவிட்டு,
எங்கோ அந்நியதேசமான தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காகக்குரல்கொடுத்தவர்தானே!
அதன்பிறகுதானே இந்தியாவைப்பற்றி நினைத்தார் ?
சீனாவுக்காகத் தான் இந்தியா சிங்களத்தோடு ஒட்டு உறவாடுகின்றதாம் அதனால் தான் தமிழர்களையும் கொன்றொழித்தது என்று சொல்லாமல் விட்டு விட்டார்
மீண்டும் உங்கள்பாணியிலேயே பதிலளிக்கிறேன்:
தாயகத்தைப்பிரிந்திருப்பது தவறாகாது;
மாறாக, தாயகத்தை மறந்திருப்பதுதான் மாபெரும்தவறு.
உங்கள் பெயருக்கேற்றவாறு தாராளமாக நீங்கள் சுகித்திருங்கள்.
ஆனால், தயவுசெய்து எமது விடுதலைப்போராட்டத்தை_ எமது இனஉணர்வை மட்டும் கொச்சைப்படுத்தாதீர்கள்.
அங்கே ஆடுகள்நனைகின்றன என்பது உண்மைதான்; அதற்காக நீங்களும் ஓநாய்களுக்குத் துணைநிற்காதீர்கள்!
இதுவே எமது விடுதலைக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி!
_ சிவம் அமுதசிவம் -
http://tamilmaravar.blogspot.com/
–
சொந்தமண் இழந்த் பின்னும் சோறு உண்டு கொழுப்போமா ?
கொந்தளித் தெழுந்து போராடாமல் வீட்டிலே குந்திக் கிடந்து நாள் கழிப்போமா ??
To unsubscribe from this group, send email to naamtamilar+unsubscribegooglegroups.com or reply to this email with the words “REMOVE ME” as the subject.