மாவீரர்களே எழுந்து வாருங்கள்..
- இவ் விடயம் 28. 11. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 2:17க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
எம் தேசத்தின் விடியலுக்காக வித்தாக
வீழ்ந்த மறவர்களே கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்
கரிகாலனின் வழியில் சென்று போர்க்களங்களில்
எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும்
எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்
அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து
எரிமலையாகி எழுந்த சூரிய புதல்வர்களே
தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள்
கண்கள் மூடி உறங்கும் தோழனே
கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்
கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே
எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம்
கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்
ஈழத்தின் வித்துக்களாய் தமிழ்ழீழத்தின் காவல்
தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய்
தமிழ்ழீழம்தான் மூச்சென்று சருகாக வீழ்ந்த வீர மறவர்களே
உங்கள் பாதங்களை மலர் தூவி வணங்குகின்றோம்.
- பாமினி
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


