மாவீரர்களே எழுந்து வாருங்கள்..

எம் தேசத்தின் விடியலுக்காக வித்தாக
வீழ்ந்த மறவர்களே கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்
கரிகாலனின் வழியில் சென்று போர்க்களங்களில்
எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும்
எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்

Maveerarnaal2அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து
எரிமலையாகி எழுந்த சூரிய புதல்வர்களே
தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள்

கண்கள் மூடி உறங்கும் தோழனே
கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்
கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே
எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம்
கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்

ஈழத்தின் வித்துக்களாய் தமிழ்ழீழத்தின் காவல்
தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய்
தமிழ்ழீழம்தான் மூச்சென்று சருகாக வீழ்ந்த வீர மறவர்களே
உங்கள் பாதங்களை மலர் தூவி வணங்குகின்றோம்.

- பாமினி

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.