இலங்கை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி அமைதி திரும்பபோவதில்லை: அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர்
- இவ் விடயம் 11. 01. 2010, (வெள்ளி),தமிழீழ நேரம் 12:05க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புலத்தமிழர்
சுதந்திரத்திரமான வாழ்வுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. உரிய தீர்வுகள் தமிழர்களுக்கு முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் விடுதலைப் போராட்டம் தன்னெழுச்சியாக உருவாகுமென அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புலத்து தமிழர்களை பொறுத்தவரை தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளுக்காக பெரும்பாலான தமிழர்கள் ஒன்றுதிரண்டிருப்பதாகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே ஏனைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்ட அவர் அனைத்து சமூகங்களிலும் அவ்வாறானவர்கள் இருப்பது வழமைதான எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் பற்றி விளக்கமளித்த அவர், சிறிலங்காவில் பெரியளவிலான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி இலங்கை தீவில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “இலங்கை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி அமைதி திரும்பபோவதில்லை: அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்தது முற்றிலும் உண்மை.